பட்டப்பகலில் வெட்ட வெளியில் மனைவி மீது கொலை முயற்சி

திருவனந்தபுரம்: ஆடவர் ஒருவர் பொது இடத்தில் தன் மனைவியின் கழுத்தைக் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் மார்ச் 20ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கொச்சி நகரில் அமைந்துள்ளது களமசேரி.

அப்பகுதியைச் சேர்ந்த தம்பதியர், வெவ்வேறு மதத்தவர். இருப்பினும், எட்டு ஆண்டுகளுக்கு முன் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

ஆறு வயதாகும் அவர்களின் பிள்ளை, அப்பாவுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தன்னோடு மீண்டும் சேர்ந்து வாழும்படி மனைவியிடம் ஆடவர் கேட்டதற்கு மாது மறுத்துவிட்டார்.

இதையடுத்து நடந்த வாக்குவாதத்தில் மனைவியின் தொண்டையைக் கத்தியால் குத்தினார் ஆடவர்.

நரம்பு ஒன்று துண்டிக்கப்பட்டதால் அதிகப்படியான ரத்தக்கசிவு ஏற்பட்டது.

தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் மாது உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆடவரைக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!