புதுடெல்லி: கடைத்தொகுதிக்குச் சென்ற ஒரு குடும்பத்திற்குப் பெருந்துயரம் காத்திருந்தது.
தனது ஒரு வயது குழந்தையைத் தூக்கியிருந்த ஒரு தந்தை, தவறுதலாக அதை மூன்றாவது மாடியிலிருந்து கீழே போட்டுவிட்டார்.
குழந்தை சுமார் 40 அடி உயரத்திலிருந்து விழுந்து மாண்டது.
சத்தீஸ்கரின் ராஜ்பூரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் கடைத்தொகுதியில் இந்த அவலச் சம்பவம் நடந்தது.
மின்படிகளில் 5 வயது என நம்பப்படும் இன்னொரு பிள்ளை செல்வதை அந்தத் தந்தை தடுக்கப் போய், தடுமாறித் தன் கைகளிலிருந்த குழந்தையை நழுவவிட்டார்.
இறந்த நிலையில் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அறியப்படுகிறது.
இதையடுத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை தொடங்கியுள்ளனர்.