தாமதமான விமானம், ரூ.85,000 இழப்பீடு தர உத்தரவு

மும்பை: இந்தியாவின் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் தொடுக்கப்பட்ட வித்தியாசமான வழக்கில் ரூ.85,000 இழப்பீடு வழங்கும்படி ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவன ஊழியரான மோகித் நிகம், 2018ஆம் ஆண்டு தாய்லாந்தின் பேங்காக் நகரிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் புறப்பட வேண்டிய அவ்விமானம், 24 மணி நேரம் தாமதமாக திங்கட்கிழமை மாலைதான் புறப்பட்டது.

குறைவான சேவைத் திறன் குறித்துப் புகாரளித்த நிகம், தனக்கு ஏற்பட்ட உடல், மன வேதனைக்கும் வேலை இழப்பிற்கும் விமான நிறுவனம் இழப்பீடு தரவேண்டும் என்று கோரியிருந்தார்.

விமான நிறுவனத்தின் கவனக்குறைவால்தான் தாமதம் ஏற்பட்டது என்ற ஆதாரத்தை அவர் சமர்ப்பித்ததாகக் கூறப்பட்டது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நிகம் அந்தத் தகவலைப் பெற்றிருந்தார்.

அவற்றின் அடிப்படையில் அவருக்கு இழப்பீடு வழங்க, ஏர் இந்தியாவிற்கு உத்தரவிடப்பட்டது. இருப்பினும் தனது பயணச்சீட்டுக் கட்டணத்தைத் திரும்பப் பெற நிகம் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!