மதுபானக் கொள்கை முறைகேடு: கவிதாவுக்கு பிணை மறுப்பு

புதுடெல்லி: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் இடைக்கால பிணை கோரி பிஆர்எஸ் மூத்த தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்தரசேகர ராவ் மகளுமான கவிதா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை (ஏப்ரல் 8) தள்ளுபடி செய்துள்ளது.

இந்த வழக்கில் கடந்த 15ஆம் தேதி கவிதாவை அமலாக்கத் துறை கைது செய்தது. தற்போது டெல்லி திஹார் சிறையில் நீதிமன்றக் காவலில் அவர் உள்ளார்.

இந்த வழக்கில் இடைக்கால பிணை கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் கவிதா மனுத்தாக்கல் செய்தார். நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

கவிதா தரப்பில் பேசிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி, “கவிதாவின் 16 வயது மகனுக்கு அடுத்த மாதம் முதல் தேர்வு நடைபெற உள்ளதால், அவரது மகனை கவனிக்க கவிதாவுக்கு பிணை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கில் கவிதா முக்கிய பங்கு வகித்துள்ளதாகக் கூறி இதற்கு அமலாக்கத் துறை எதிா்ப்பு தெரிவித்தது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இடைக்கால பிணை மனுவை நீதிபதி திங்கட்கிழமை தள்ளுபடி செய்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!