தண்ணீர் பிடிப்பதில் தகராறு; பெண்ணைக் குத்திக் கொன்ற சிறுமி

புதுடெல்லி: டெல்லியின் பார்ஷ் பஜார் பகுதியில் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவரை 15 வயதுச் சிறுமி கத்தியால் குத்திக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனி, 34, தன் கணவர் சத்பீருடன் அந்தப் பகுதியில் வசித்தார்.

இந்தத் தம்பதி அண்டை வீட்டுக்காரர்களுடன் அடிக்கடி சண்டை போட்டதாகக் கூறப்பட்டது.

சில நாள்களுக்குமுன் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பில், பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி, 15 வயது மகளுடன் சோனி-சத்பீர் தம்பதி தகராறு செய்தனர்.

இதில், அந்தச் சிறுமியின் கையைப் பிடித்து, சோனி முறுக்கியதாகத் தெரிகிறது. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சிறுமிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பிய சிறுமியின் குடும்பத்திற்கும் சோனி-சத்பீர் தம்பதிக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்தமுறை, சிறுமி கத்தி ஒன்றை எடுத்து வந்து சோனியை வயிற்றில் குத்தியதாகவும் தாக்குதலில் சோனியின் வலது கையிலும் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சோனி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து காவல்துறை சிறுமியைக் கைது செய்தது. அவர் சிறுவர் சீர்திருத்த முன்னிலைப்படுத்தப்படுவார் என்று காவல்துறை தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!