தகிக்கும் வெயிலுக்கு ஒரே நாளில் 33 வாக்குச்சாவடி ஊழியர்கள் உயிரிழப்பு: மாநிலத் தேர்தல் தலைவர்

தகிக்கும் வெயிலுக்கு ஒரே நாளில் 33 வாக்குச்சாவடி ஊழியர்கள் உயிரிழப்பு: மாநிலத் தேர்தல் தலைவர்

1 mins read
a36ef2f4-7df1-4dc9-8c6c-a97752409f00
இந்தியாவின் புவனேஸ்வரில் மே 25ஆம் தேதியன்று ஆறாவது கட்டப் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அப்போது, வெயிலின் கொடுமை தாளாமல் ஒரு துண்டால் தலையை மூடிக்கொண்டு வாக்காளர்களில் சிலர் வாக்குச் சாவடிக்கு வெளியே வரிசையில் காத்திருக்கின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

லக்னோ: இந்தியாவில் இறுதிக் கட்டத் தேர்தலுக்கான வாக்களிப்பின்போது, கடும் வெப்பம் காரணமாக ஒரு மாநிலத்தில் மட்டும் குறைந்தது 33 வாக்குச்சாவடி ஊழியர்கள் உயிரிழந்ததாக உயர் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஏழாவது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி முடிவடைந்த நிலையில், “33 வாக்குச்சாவடி பணியாளர்கள் வெப்பத் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர்.

“இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 15 லட்சம் ரூபாய் ($24,000) பண இழப்பீடு வழங்கப்படும்,” என்று வடக்கு மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி திரு நவ்தீப் ரின்வாத் செய்தியாளர்களிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்