ஸ்ரீஹரிகோட்டா: அதிநவீன இஓஎஸ்-08 உட்பட 2 செயற்கைக்கோள்கள், எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) காலை சரியாக 9.17 மணியளவில், திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்பட்டது.
அதற்கான 6 மணி நேர ‘கவுன்ட்டவுன்’ அதிகாலை 3 மணியளவில் தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சாா்பில் புவிக் கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டது.
இஓஎஸ்-08 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இது பேரிடர் காலங்களில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.
இந்த செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடையுடனும் ஓராண்டு ஆயுட்காலத்துடனும் வடிவமைக்கப்பட்டது.
தரையிலிருந்து ஏறக்குறைய 475 கி.மீ. தொலைவில் உள்ள புவிதாழ் வட்டப் பாதையில் அந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த செயற்கைக்கோளுடன் மூன்று நவீன ஆய்வுச் சாதனங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
அவற்றில், ‘இஓஐஆா்’ என்னும் சாதனம், பேரிடா் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவில் துல்லியமான படம் எடுக்கவும் பயன்படும்.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல, ‘ஜிஎன்எஸ்எஸ்-ஆா்’ சாதனம் கடல் மேற்பரப்புக் காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பத மதிப்பீடு, நீா்நிலைகளைக் கண்டறிதல் போன்ற பணிகளுக்குப் பயன்பட உள்ளது.

