முன்னணி நடிகைபோல் ஆள்மாறாட்டம் செய்து வேலை மோசடி

மும்பை: தன் பெயரில் சமூக ஊடகங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி, மோசடி செய்வதாக இந்தித் திரையுலக முன்னணி நடிகை வித்யா பாலன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் போலிக் கணக்குகள், மோசடி நடவடிக்கைகளுக்கும் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து ஏமாற்றுவதற்கும் பயன்படுத்தப்படுவதாக வித்யா தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

வாட்ஸ்அப் வழியாக வேலை வாய்ப்புகள் அளிப்பதாகக் கூறி, அவரது பெயரில் தமக்குக் குறுஞ்செய்திகள் வந்ததாக, தெரிந்தவர் ஒருவர் வித்யாவிடம் கூறியதை அடுத்து, இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.

வித்யா பெயரில் உருவாக்கப்பட்ட போலி இன்ஸ்டகிராம் பக்கம் குறித்தும் போலி மின்னஞ்சல் கணக்கு குறித்தும் இவ்வாண்டு ஜனவரி 17 - 19ஆம் தேதிகளுக்குள் வித்யாவிற்குத் தெரிந்தவர்கள் பலரும் அவரிடம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

இதனையடுத்து, ஜனவரி 20ஆம் தேதி தன் மேலாளர் மூலமாக மும்பை காவல்துறையிடம் வித்யா புகாரளித்தார்.

இணையவழி ஆள்மாறாட்டம் குறித்தும் இணையத்தில் ஒருவரின் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இவ்வழக்கு வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

இதனிடையே, நடிகை இலியானாவுடன் வித்யா சேர்ந்து நடித்துள்ள ‘தோ அவுர் தோ பியார்’ திரைப்படம் வரும் மார்ச் 29ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!