தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராமாயண நடன நாடகத்தை அரங்கேற்றிய சீனக் கலைஞர்கள்

1 mins read
be8a2576-3e55-4e3f-8c6b-f45135b22038
பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ராமாயண நடன நாடகம் படைக்கப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

பெய்ஜிங்: சீனாவில் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட நடன நாடகத்தை கலைஞர்கள் சனிக்கிழமை (நவம்பர் 1) அரங்கேற்றினர்.

பிரபல சீன அறிஞர் மறைந்த பேராசிரியர் ஜி.சியான்லின் எழுதிய ராமாயணத்தின் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு நடன நாடகமான ‘ஆதி காவ்யா-முதல் கவிதை’யை சீன நடனக் கலைஞர்கள் குழு அரங்கேற்றியது.

சீனப் பரதநாட்டிய நிபுணர் ஜின் ஷான்ஷான் இயக்கிய இந்த நாடகம், 50க்கும் மேற்பட்ட திறமையான உள்ளூர் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு, பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்காகத் திரண்டு வந்த பார்வையாளர்கள், நிகழ்ச்சியைப் பார்த்து பரவசம் அடைந்ததாக எக்ஸ் பதிவில் இந்தியத் தூதரகம் கூறியது.

“இந்த நடன நாடகம் இரண்டாவது முறையாக நடத்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்று நிகழ்ச்சி 2025 ஜனவரியில் ஷூனி கிராண்ட் அரங்கில் முதன்முறையாக நடைபெற்றது,” என்றும் அது சொன்னது.

கடந்த மாதம், ‘சங்கமம்-இந்தியத் தத்துவ மரபுகளின் சங்கமம்’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கிற்கு இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில், பகவத் கீதை, இந்திய நாகரிக பண்புநலன்கள் குறித்து புகழ்பெற்ற சீன அறிஞர்கள் பேசினர்.

குறிப்புச் சொற்கள்