இணையப் பாதுகாப்பு குறித்த இலவசப் பயிலரங்கிற்கு ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
எண் 1 பீட்டி சாலையில் அமைந்துள்ள சிண்டா உள்ளரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை இப்பயிலரங்கு நடைபெறும்.
தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஜமீல் முஹம்மது மன்சூர் பயிலரங்கை நடத்தவிருக்கிறார்.
இப்பயிலரங்கில் மாணவர்களும் பொதுமக்களும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.
முன்பதிவுக்கு: tinyurl.com/azm73d98.
கூடுதல் விவரங்களுக்கு 96933786 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

