கூத்தாநல்லூர் சங்கத்தின் 10,000 வெள்ளி நன்கொடை

கூத்தாநல்லூர் சங்கத்தின் 10,000 வெள்ளி நன்கொடை

2 mins read
40676f3c-5166-4189-ad07-0ca8cbc03ef2
ஜாமியா சிங்­கப்­பூர் அறநிறு­வ­னத்துக்கு 5,000 வெள்ளி நன்கொடை. படம்: சிங்கப்பூர் கூத்தாநல்லூர் சங்கம் -

சிங்­கப்­பூர் கூத்­தா­நல்­லூர் சங்­கம். இரு சமூகநல அமைப்­பு­க­ளுக்கு தலா 5,000 வெள்ளி நன்­கொடை வழங்­கி­யுள்­ளது.

1996ல் தொடங்­கப்­பட்­ட அச் சங்கம், பயன்­த­ரத்­தக்க பல்­வேறு சமூ­கப் பணி­களை முன்­னெடுத்து செய்து வரு­கிறது.

இவ்­வாண்டு சங்க உறுப்­பி­னர் களி­ட­மி­ருந்து கிடைத்த பொரு­ளுத வியை சிங்­கப்­பூர் ஜாமியா அற நிறு­வ­னம், சிங்­கப்­பூர் முஹம்மதியா இல்­லம் ஆகிய இரு அமைப்புகளுக்கு பகிர்ந்­த­ளித்து அறப்­ப­ணி­யில் மீண்­டும் அது தன்னை நிலை­நி­றுத்தி உள்­ளது.

இம்­மா­தம் 14ஆம் தேதி கூத்­தா­ நல்­லூர் சங்­கத்­தின் (சிங்­கப்­பூர்) தலை­வ­ரும் மூத்த சமூக அடித் ­த­ளத் தலை­வ­ரு­மான திரு அப்­துல் அலீம் தலை­மை­யில் முக்­கிய நிர்­வா­கி­க­ளான வருசை ஜஃப­ருல்­லாஹ், முஹம்­மது ஹாரீஸ், தாஜுத்­தீன், 'ஆடிட்­டர்' ஹாஜா மைதீன், டி.எம்.பது­ரு­தீன், ஆதம் ஷாஹுல் ஹமீத், எஸ்.எஸ்.சிரா­ஜு­தீன் ஆகி­யோர் ஜாமியா சிங்­கப்­பூர் அற­நி­று­ வ­னம் சென்று கூத்­தா­நல்­லூர் சங்க உறுப்­பி­னர்­கள் வழங்­கிய ஜகாத் நிதி ஐயா­யி­ரம் வெள்­ளிக்­கான காசோ­லையை ஜாமியா சிங்­கப்­பூர் அறநிறு­வ­னத் தலை­வர் டாக்­டர் முஹம்­மது ஹஸ்பி அபு­பக்­க­ரி­டம் வழங்­கி­னர். அந்­நி­கழ்­வில் முதன்மை துணைத் தலை­வர் டாக்­டர் ஹெச். எம். சலீம், பொதுச் செய­லார் மற்றும் செயல் அதி­காரி ஜாபர் மைதீன் மற்­றும் நிர்­வா­கி­கள் வர­வேற்று நன்றி தெரி­வித்­த­னர்.

அதை முடித்­துக்­கொண்டு முஹம்­ம­தியா சங்­கத்­தின் நல்­வாழ்வு இல்­லத்­திற்­குச் சென்று அதன் தலை­வர் உஸ்­தாத் முஹம்­மது அஸ்ரி அஸ்­மான் மற்­றும் திரு­மதி நிசா ஏ. மஜீத் ஆகி­யோ­ரி­டம் ஜகாத் நிதி ஐயா­யி­ரம் வெள்­ளிக்­கான காசோ­லையை வழங்கி கூத்­தா­நல்­லூர் சங்­கத்­தி­னர் மன நிறை­வும் மகிழ்ச்­சி­யும் அடைந்­த­னர்.

"இந்த இரண்டு சமூக சேவை அமைப்­பு­க­ளு­ட­னான சந்­திப்பு கற்றல் பய­ண­மாக இருந்­த­தா­க­வும் வசதி குறைந்­த­வர்­க­ளுக்கு ஜாமியா உணவு வங்கி எவ்­வாறு உலர் உணவு­களை வழங்­கு­கிறது, முஹம் ­ம­தி­யா­வில் சிர­ம­மான குடும்­பங்­ க­ளைச் சேர்ந்த சிறு­வர்­கள் எவ்­வாறு கவ­னித்­துக் கொள்­ளப்­ப­டு­கி­றார்­கள் மற்­றும் கல்வி, வாழ்க்­கைத் திறன்­கள், இஸ்­லா­மிய நெறி­கள் எவ்­வாறு கற்­றுக் கொடுக்­கப்­ப­டு­கின்­றன போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த இரு சந்­திப்­பு­களும் உத­வி­யது," என்­றார் அப்­துல் அலீம்.