முனைப்புடன் கலந்துகொள்ளும் முதியோர்

முனைப்புடன் கலந்துகொள்ளும் முதியோர்

2 mins read
d4a6a554-e335-4ff8-816c-34594ef54292
தேசிய தினத்தை முன்னிட்டு பல்வேறு நிறங்களில் கரடி பொம்மைகளைக் குழுவாகச் சேர்ந்து உருவாக்கி வருகிறார் திருவாட்டி தேவி சம்பந்தன். படம்: மோனலிசா -
multi-img1 of 2

மோனலிசா

பதி­னா­றா­வது முறை­யாக தேசிய தின கொண்­டாட்­டங்­களில் கலந்­து­கொள்­வதை எண்ணி பெரு­மி­தம் கொள்­கி­றார் 73 வய­தான தேவி சம்­பந்­தன்.

தேசிய தின வட்­டா­ரக் கொண்­டாட்­டங்­களில், பைக்­கு­ழல் வாசித்து (Bagpipe) இவர் மகிழ்­விக்­க­வுள்­ளார்.

திரு­வாட்டி தேவி பைக்­கு­ழல் வாசித்­த­லில் பழுத்த அனு­ப­வம் பெற்ற முன்­னோடி ஆவார்.

1967 ஆம் ஆண்டு மக்­கள் கழ­கம் தொடங்­கிய 'சிங்­கப்­பூர் கேர்ல் பைப்­பர்ஸ்' எனும் பெண்­கள் பைக்­கு­ழல் இசைக்­கு­ழு­வில் சேர்ந்­தார் தேவி.

அவ்­வாண்டு முதல் 1980ஆம் ஆண்­டு­வரை அந்த இசைக்­கு­ழு­வில் பெரு­மு­ரசு (Bass Drum), பைக்­கு­ழல் ஆகிய இசைக்­க­ரு­வி­களை ஒவ்­வோர் ஆண்­டும் தேசிய தின அணி­வ­குப்­பன்று வாசித்­த­தாக அவர் கூறி­னார்.

"1968ஆம் ஆண்டு தேசிய தின அணி­வ­குப்­பில் அதி­பர் வரு­கைக்­காக காத்­தி­ருந்­த­போது திடீ­ரென கடு­மை­யாக மழை பெய்­தது. கொட்­டும் மழை­யில் கண் சரி­யாக தெரி­யாத சூழ­லில் துளி­கூட அசை­யா­மல் விழிப்பு நிலை­யில் அணி­வ­குப்பு ஆரம்­பிக்­கும் வரை நின்­றி­ருந்­தோம். நாட்­டுப்­பற்றை உணர்த்­திய மறக்க முடி­யாத சம்­ப­வம் அது," என்று நினைவுகூர்ந்­தார் தேவி.

1980களில் சிக்­லாப் சவுத் சமூக மன்­றத்­தில் தெமா­செக் பைப்­பர்ஸ் எனும் குழுவை உரு­வாக்­க உதவி னார். இப்­போது அந்­தக் குழு உரு­மாறி சிங்­கப்­பூர் பைப் பேண்ட் என்று அழைக்­கப்­ப­டு­கிறது.

சட்ட நிறு­வ­னத்­தில் செய­லா­ள­ராகப் பணி­பு­ரிந்து ஓய்­வு­பெற்ற இவ­ருக்கு இரண்டு மகன்­களும் நான்கு பேரப்­பிள்­ளை­களும் உள்­ள­னர். கடந்த 15 ஆண்­டு­க­ளாக சமூக கலை, கலா­சார மன்­றங்­களில் தொண்­டூ­ழி­யம் செய்து வரும் இவர், தென்­கி­ழக்கு வட்­டா­ரக் கொண்­டாட்ட நிகழ்­வு­களில் கலந்து­கொள்­கி­றார்.

இசை­யைத் தவிர கலை வழி­யா­க­வும் அவர் பங்­காற்­ற­வுள்­ளார்.

"சிங்­கப்­பூ­ரின் ஒற்­று­மை­யைக் கொண்­டா­டும் வித­மாக தெற்கு-கிழக்கு வட்­டார வாசி­க­ளுக்­காக குழு­வாக 600 கரடி பொம்­மை­களுக்கு வண்­ணம் தீட்டி காட்­சிக்கு வைக்­க­வுள்­ளோம்.

"கலை­க­ளி­லும் ஓவி­யங்­க­ளி­லும் எனக்கு அதிக ஈடு­பா­டுள்­ளது. இந்த நட­வ­டிக்­கை­யில் கலந்­து­கொள்­வ­தன் மூலம் ஒரு குழந்­தை­யா­கவே மாறி­விட்­டேன்," என்று குதூ­க­லத்­து­டன் தேவி பகிர்ந்­தார்.

திரு­வாட்டி தேவி குழு­வுடன் உரு­வாக்­கி­யுள்ள கரடி பொம்­மை­கள் ஆகஸ்ட் 7ம் தேதி மாலை விஸ்மா கேலாங் சிராய் கடைத்­தொ­கு­தி­யில் காட்­சிக்கு வைக்­கப்­படும். திருவாட்டி தேவி பங்குபெறும் பைக்குழல் இசைநிகழ்ச்சி அங்கு மாலை 6 மணிக்கு நடைபெறும்.