சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களம் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) மாலை 4 மணிக்குச் சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்திலுள்ள ‘பாசிபிலிட்டி’ அறையில் நடைபெறும்.
அதில், எழுத்தாளர் யூசுப் ராவுத்தர் ரஜித்தின் ‘வேர்களைத் தழுவும் விழுதுகள்’ என்ற புதினம் பற்றிய கலந்துரையாடல் இடம்பெறும். அந்நூலின் சிறப்புகள் குறித்துப் பகிர்ந்துகொள்ளவுள்ளார் பேச்சாளர் வானதி.
கதைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் இடம்பெறும்; வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
ஆகஸ்ட் மாத நூல் அறிமுகப் போட்டிக்கு, தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றைப் பற்றி 140 சொற்களுக்குள் நயம்பட நூலறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த நான்கு நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.
மூன்று பிரிவுகளாக நடைபெறும் ஆகஸ்ட் மாதச் சிறுகதைப் போட்டிக்கான தொடக்க வரிகள்:
உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரிவு (200 - 300 சொற்கள்): “நானா... நானேதானா... இது உண்மைதானா...?’ என்னால் நம்பவே முடியவில்லை”
இளையர் பிரிவு (300 - 400 சொற்கள்): “உடலும் சோர்ந்திருக்க, காடு இருளைப் போர்த்திக்கொள்ள தொடங்கியது”
பொதுப்பிரிவு (400 - 500 சொற்கள்): “விடுப்பில் இருக்கும்போது இப்படித் தொல்லை கொடுக்கிறாங்களே” வெறுப்போடு கைபேசியைப் பார்த்தேன்.
தொடர்புடைய செய்திகள்
படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு http://singaporetamilwriters.com/kkcontest என்ற மின்னிலக்கப் படிவம் வழியாக ஜூலை 26 வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேல்விவரங்களுக்கு: http://singaporetamilwriters.com/kathaikalam/, பிரதீபா வீரபாண்டியன் - 81420220, பிரேமா மகாலிங்கம் - 91696996