இவ்வாண்டு தமிழ் முரசின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு மாதத்திற்கு $17.90 என்ற விலையில் ‘ஆல் இன் ஒன் சப்ஸ்கிரிப்ஷன்’ (all in one subscription) எனப்படும் அச்சு மற்றும் மின்னிதழ் அடங்கிய சிறப்புத் தொகுப்பின் சந்தாதாரரானால் $119 மதிப்புள்ள சமையல் பாத்திரத்தை இலவசமாகப் பெறலாம்!
2024 ஜூலை 6ஆம் தேதி, தமிழ் முரசின் 89வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்திய மரபுடைமை நிலையத்தில், பல சுவாரசியமான நடவடிக்கைகள் இடம்பெற்றன.
தமிழ் முரசின் முதல் இளையர் கருத்தரங்கும் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட இளையர்கள் பலரும் தமிழ்மொழியை எவ்வாறு பிறரிடம் கொண்டுபோய்ச் சேர்க்கலாம், இன்றைய செய்தித்தாள் வாசிப்புப் பழக்கத்தை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பன போன்ற கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த சாவடி வழியாக, அச்சு மற்றும் மின்னிதழ் அடங்கிய சிறப்புத் தொகுப்பின்கீழ் சந்தாதாரர்களாகச் சேர்ந்தவர்களுக்கு $119 மதிப்புள்ள சமையல் பாத்திரம் பரிசாக வழங்கப்பட்டது.
இச்சலுகை நீடிப்பதால், இணையம் வழியாகச் சந்தாதாரராகி, சிறப்புப் பரிசைப் பெற இன்னும் வாய்ப்புள்ளது.
தமிழ் முரசு இணையத்தளத்தின் மேற்பகுதியிலுள்ள ‘சந்தா’ என்ற பொத்தானை அழுத்தி, உங்களுக்கு விருப்பமான சந்தா திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், நாள்தோறும் உங்கள் முகவரிக்கு நாளிதழ் விநியோகம் செய்யப்படும். அத்துடன், ஒரே நேரத்தில் நான்கு மின்னிலக்கக் கருவிகளில் மின்னிதழ்களை வாசிக்கும் அனுபவத்தையும் பெறலாம்.

