ஜூரோங்கில் விபத்து; மதுபோதையில் கார் ஓட்டிய சந்தேகத்தில் ஓட்டுநர் கைது

ஜூரோங் வெஸ்ட் செண்ட்ரல் 1-இல் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) இரவு இரண்டு கார்கள் மோதிக்கொண்டன.

விபத்தில் சிக்கிய மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் போது சாலையோரம் இருந்த விளக்குக் கம்பம் மற்றும் சில மரங்கள் மீது கார்கள் மோதி சேதமாகின. 

பிஎம்டபிள்யூ காரை ஓட்டி வந்த 59 வயது ஆடவர் மதுபோதையில் வாகனத்தை ஓட்டிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

விபத்து குறித்து இரவு 11:15 மணிக்கு தங்களுக்கு தகவல் வந்ததாக குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் கூறினர். 

விபத்தில் சிக்கிய மூவரும் எங் தெங் ஃபாங் மருத்துவமனையில் சுய நினைவுடன் சேர்க்கப்பட்டனர். 

விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!