ஜாலான் புசாரில் கலவரத்தில் ஈடுபட்டதாக 7 பேர் கைது

ஜாலான் புசாரில் கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. 

சந்தேக நபர்களின் வயது 23க்கும் 49க்கும் இடைப்பட்டது. 

திங்கள்கிழமை பின்னிரவு 12:50 மணிக்கு ஜாலான் புசாரில் இரு குழுக்கள் சண்டையிட்டு வருவதாக காவல்துறைக்கு தகவல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருபிரிவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது சண்டையாக மாறியதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கேமராக்களை வைத்து சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

சண்டையில் 29 வயது ஆடவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

5 ஆடவர்கள் மீது கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது, குற்றம் நிரூபணமானால் அவர்களுக்கு 7ஆண்டுகள் வரையிலான சிறை, பிரம்படி விதிக்கப்படும்.

இருவர் விசாரணைக்கு உதவிவருகின்றனர்.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!