தெம்பனிஸ் விரைவுச்சாலையில் திங்கட்கிழமை மாலை நிகழ்ந்த சாலை விபத்தை அடுத்து ஏழு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அந்த விபத்தில் நான்கு வாகனங்கள் மோதிக்கொண்டன.
நான்கு லாரிகள் சம்பந்தப்பட்ட அந்த விபத்து, சிலேத்தார் விரைவுச்சாலைக்குச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையில் பொங்கோல் ரோடு வெளிவழிக்கு அப்பால் இரவு 7.45 மணிக்கு நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
குட்டி லாரிகளை ஓட்டிவந்த 23, 24 வயதுகளில் உள்ள இரண்டு ஓட்டுநர்களும் ஐந்து பயணிகளும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதுசுய நினைவுடன் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது.
புலன்விசாரணை தொடர்கிறது.