சிங்கப்பூரில் ஆண்டிற்கு 7 நாள்கள்தான் பேருந்து எண் 405 சேவையில் இருக்குமாம்.
பொதுமக்கள் அந்த ஏழு நாள்களில் மட்டும் தான் அந்த பேருந்தை பயன்படுத்தமுடியும்.
பேருந்து எண் 405 பூன் லே பேருந்து முனையத்தில் இருந்து சுவா சூ காங், லிம் சு காங் இடுகாடுகள் போன்றவற்றுக்குச் செல்லும்.
பேருந்து சிங் மிங், புனித வெள்ளி, ரமலான், நோன்பு பெருநாள், நோன்பு தொடங்கும் முதல் நாள், தீபாவளி, ஆல் சோல்ஸ் தினம் ஆகிய நாள்களில் மட்டும் தான் சேவையில் இருக்கும்.
பொது விடுமுறை நாள்களில் பொதுமக்கள் தங்களது அன்புக்குரியவர்களை அடக்கம் செய்த இடத்திற்கு சென்று மரியாதை செலுத்த இந்த பேருந்து சேவை உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.
பேருந்து சிங்கப்பூரின் வெளிப்புரங்களில் உள்ள சாலைகளில் பயணம் செய்யும் என்றும் பேருந்தை இளம் ஓட்டுநர்கள் தான் ஓட்டுவார்கள் என்றும் 8 வோர்ல்டு நியூஸ் தெரிவித்தது.
முதல் பேருந்து காலை 7 மணிக்கும் கடைசி பேருந்து மாலை 5 மணிக்கும் பூன் லே பேருந்து முனையத்தில் இருந்து கிளம்பும்.
இந்த பேருந்திற்காக மட்டுமே சில இடங்களில் பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.