வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் இலக்குடன் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) தொடக்கம் கண்டுள்ளது சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகள் திட்டம் 2026.
இத்திட்டத்தின்படி சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு $300 மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
பொங்கோல் சமூக மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணைப் பிரதமரும், வர்த்தக தொழில் அமைச்சருமான திரு கான் கிம் யோங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
தென்மேற்கு வட்டார மேயர் லோ யென் லிங், வடகிழக்கு வட்டார மேயர் பே யாம் கெங், தென்கிழக்கு வட்டார மேயர் தினேஷ் வாசு தாஸ், மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் டெனிஸ் புவா, ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ‘சிடிசி’ பற்றுச்சீட்டுகள் திட்டத்தில் இணைந்துள்ள பேரங்காடிகளிலும் குடியிருப்பு வட்டாரக் கடைகளிலும் அந்தப் பற்றுச்சீட்டுகளைப் மக்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும் விவரிக்கப்பட்டது.
ஏறத்தாழ 1.27 மில்லியன் சிங்கப்பூர்க் குடும்பங்கள் இந்தப் புதிய பற்றுச்சீட்டுகளைப் பெறவிருக்கின்றன.
இணையம் வாயிலாகப் பற்றுச்சீட்டுகளைப் பெற விரும்புவோர், ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டும் www.go.gov.sg/cdcv இணையத்தளத்தில் சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

