தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கண்கவர் தீபாவளி அலங்காரங்களால் மனங்கவரும் சாங்கி விமான நிலையம்

1 mins read
5f5a051a-ee85-45ba-92ec-c5c5ee2e5edc
இந்தியப் பண்பாட்டிலும் முக்கிய நிகழ்வுகளிலும் முதன்மையானதாகத் திகழும் அணிகலன்கள் பூந்தோட்டமாகக் காட்சியளிக்கின்றன.  - படம்: சாங்கி விமான நிலையக் குழுமம்

தீபாவளியை முன்னிட்டு கண்கவர் அலங்காரங்களால் பயணிகளைக் கவர்ந்து வருகிறது சாங்கி விமான நிலையம்.

சாங்கி விமான நிலையத்தில் பேரழகுடன் காட்சிதரும் மயில்.
சாங்கி விமான நிலையத்தில் பேரழகுடன் காட்சிதரும் மயில். - படம்: சாங்கி விமான நிலையக் குழுமம்

ரங்கோலிக் கோலம், மயில், காதணி என இந்தியப் பாரம்பரியத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் குறிப்பிடும் அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு பல்வேறு அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மருதாணியிடும் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மருதாணியிடும் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. - படம்: சாங்கி விமான நிலையக் குழுமம்

இவற்றுடன், பயணிகளுக்கு மகிழ்வூட்டும் நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மருதாணியிடுதல், முறுக்கு சுவைத்தல் போன்றவை மூலம் சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கும் வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கும் பண்டிகைக்கால உணர்வை வழங்கி வருகிறது சாங்கி விமான நிலையக் குழுமம்.

- படம்: சாங்கி விமான நிலையக் குழுமம்

இந்தியப் பண்பாட்டிலும் முக்கிய நிகழ்வுகளிலும் முதன்மை இடம்பெறும் அணிகலன்கள் பூந்தோட்டமாகக் காட்சியளிக்கின்றன. 

குறிப்புச் சொற்கள்