கொரோனா கிருமித்தொற்றைக் கண்டுபிடிப்பதில் ‘தங்கத் தரத்தில்’ சிங்கப்பூர்

கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதில் சிங்கப்பூரின் அணுகுமுறை ‘தங்கத் தரம்’ என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுவதற்கு சிங்கப்பூரை ஆய்வாளர்கள் அடையாளக் குறியீடாக வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

கொவிட்-19 தொற்றைக் கண்டுபிடிப்பதில் சிங்கப்பூர் பயன்படுத்தும் உத்திகளை மற்ற நாடுகளும் பின்பற்றினால், உலக அளவில் தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதைப்போல 2.8 மடங்கு அதிகமான கிருமித் தொற்று சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் என்று அந்த ஆய்வு குறிப்பிட்டது.

“பிப்ரவரி மாதம் 4ஆம் தேதிக்குள் சிங்கப்பூரில் 18 பேருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ‘தங்கத் தரம்’ அல்லது கிட்டத்தட்ட நிறைவான கண்டுபிடிப்பு,” என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் டி.எச்.சான் பொதுச் சுகாதாரப் பள்ளியைச் சேர்ந்த 4 ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ள நாடுகள் சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில், கிருமித்தொற்று ஏற்பட்ட 40 விழுக்காட்டினரை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்ததாக அந்த ஆய்வு முடிவு குறிப்பிட்டது.

கண்காணிப்பு குறைந்த நாடுகளில் அந்த அளவு 11% மட்டுமே என்பது ஆய்வாளர்களின் முடிவு.

medRxiv இணைய சுகாதார அறிவியல் தளத்தில் இந்த ஆய்வு முடிவு பதிவேற்றப்பட்டிருந்தது.

#கொரோனா #சிங்கப்பூர் #தங்கத்தரம் #தமிழ்முரசு


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!