பொங்கோல் வீவக வீட்டில் மாண்டுகிடந்த தம்பதி

பொங்கோல் வீவக வீட்டில் மாண்டுகிடந்த தம்பதி

1 mins read
31d45f93-5c30-4554-8178-a4ffda6b9b0d
நார்த்‌ஷோர் டிரைவ் புளோக் 408Bல் கணவன், மனைவி மாண்டுகிடந்தனர். - படம்: சாவ்பாவ்

பொங்கோலில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடொன்றில் கணவனும் மனைவியும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) காலை மாண்டுகிடக்கக் காணப்பட்டனர்.

கணவன் 70 வயதையும் மனைவி 60 வயதையும் கடந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. வீட்டின் தரையில் ரத்தத்தைக் காணமுடிந்தது.

நார்த்‌ஷோர் டிரைவ் வீவக புளோக் 408Bன் 10வது தளத்தில் உள்ள வீட்டில் அவர்கள் மாண்டுகிடந்தனர் என்று சாவ்பாவ் ஊடகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்