சிங்கப்பூர் வருகிறார் ரொனால்டோ

காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூன் 2, 3ஆம் தேதிகளில் சிங்கப்பூர் வருகிறார்.

ரொனால்டோ சிங்கப்பூர் செல்வந்தர் பீட்டர் லிம்மின் உபகாரச் சம்பளத் திட்டங்களுக்கு  ஊக்கமளிக்கும் விதமாக இங்கு வருகிறார்.  

#BeSIUPER என்ற கருப்பொருள் மூலம் இளையர்கள் இடையே நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அதிகரிக்கும் விதமாக ரொனால்டோ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். 

சனிக்கிழமை ரொனால்டோ 1,000க்கும் அதிகமான இளையர்களை சந்திக்கவுள்ளார்.  சிலருடன் இணைந்து அவர் பேடல் பந்தும் விளையாடவுள்ளார்.

திரு பீட்டர் லிம், 2010ஆம் ஆண்டு முதல் அறநிறுவனங்களுடன் இணைந்து உபகாரச் சம்பளங்களை வழங்கி வருகிறார். 

ரொனால்டோவுடன் நெருக்கமாக உள்ளவர்களில் பீட்டர் லிம்மும் ஒருவர். அவர் ஸ்பெயினின் லா லீகா கிண்ணத்தில் விளையாடும் வெலன்சியா அணியின் உரிமையாளரும்கூட. 

ஐந்து முறை சிறந்த காற்பந்து விளையாட்டாளர் என்று பேலண்டோர் விருதை வென்ற ரொனால்டோ தற்போது சவூதி அரேபியாவின் அல் நசர் அணிக்கு விளையாடிவருகிறார். 

கடந்த ஜனவரி மாதம் அவர் $270.4 மில்லியன் சம்பளத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!