7வது மாடியில் இருந்து விழுந்தார்: துரதிருஷ்ட சம்பவம் என தீர்ப்பு

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள், ஓல்டு ஏர்போர்ட் ரோடு அருகே உள்ள ஜாலான் தீகா, புளோக் 47ன் ஏழாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் 2021ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி  சோதனையிட்டனர்.

அப்போது, கோ சுவே டீ, 59, என்ற போதைப் புழங்கி, வீட்டின் சன்னல் வழியாக வெளியேறி கீழே விழுந்து இறந்துவிட்டார். 

அந்த மரணம் பற்றி விசாரணை நடத்திய மரண விசாரணை அதிகாரி, அந்த ஆடவர் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக கீழே விழுந்திருக்கிறார் என்பதற்குச் சாட்சியம் இல்லை என்று சென்ற மாதம் 31ஆம் தேதி தீர்ப்பில் குறிப்பிட்டார். 

அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க தனக்கு இருந்த ஒரே ஒரு வழியை அவர் பயன்படுத்தி இருக்கிறார். கோவின் மரணம் துரதிருஷ்டவசமான ஒரு சம்பவம் என்று அவர் தீர்ப்பில் கூறினார். 

அந்த ஆடவர், 1989 ஆம் ஆண்டுக்கும் 2005ஆம் ஆண்டுக்கும் இடையில் போதைப் புழக்கம், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களுக்காக பல முறை சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்பது ஆவணங்கள் மூலம் தெரிகிறது.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!