நாய்களைத் தள்ளி அடித்த ஊழியர்களுக்குத் தற்காலிகப் பணிநீக்கம்

‘ஸேவியன் அன்ட் பேக்’ எனும் நாய்களுக்குப் பயிற்சி வழங்கும் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் அவர்கள் இருவரும் இரண்டு நாய்களைத் தள்ளுவதையும் அடிப்பதையும் காணமுடிந்தது.

இன்ஸ்டகிராமில் அதனைக் காட்டும் காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இரண்டு பயிற்றுவிப்பாளர்களும் ஒரு நாயை அடிப்பதையும் படம் எடுப்பதற்காக மற்றொரு நாயைப் பலமுறை தள்ளுவதையும் காணொளியில் காண முடிந்தது.

இணையத்தில் பரவிவரும் காணொளிகளில், நாய்களுக்கு எதிரான தகாத நடத்தை வெளிப்படுவதைக் காணமுடிவதாக அந்நிறுவனத்தின் நிறுவனர் இன்ஸ்டகிராமில் தெரிவித்தார்.

தாம் அந்தக் காணொளியில் இடம்பெறவில்லை என்றும், அந்த இரண்டு ஊழியர்களும் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

அத்தகைய சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய நிறுவனம் அதன் அனைத்து சேவைகளையும் உன்னிப்பாகக் கண்காணித்துவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!