ஹெச்ஐவி கிருமி இருப்பதை மறைத்து ரத்த தானம் செய்த ஆடவருக்குச் சிறை

தமது உடலுறவு தொடர்பான தகவல்களை மறைத்து சிங்கப்பூரில் ரத்த தானம் செய்த ஆடவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடவர் ஹெச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டும் உள்ளார். 

தகவல்களை மறைத்து ரத்த தானம் செய்த அந்த 27 வயது மலேசிய ஆடவருக்கு மூன்று மாதங்கள் இரண்டு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டிக்கப்பட்ட ஆடவர் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் வெவ்வேறு நபர்களுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

ஆடவர் அதே ஆண்டு அக்டோபர் மாதம் ரத்த தானம் செய்துள்ளார். அப்போது கொடுக்கப்பட்ட ரத்த தானப் படிவத்தில் பொய்யான தகவல்களைத் தந்துள்ளார்.

பிறகு ஆடவரின் ரத்தத்தை சோதனை செய்த அதிகாரிகள் அவர் ஹெச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டதை உறுதிசெய்தனர். 

அதன் பிறகு நடந்த விசாரணையில் ஆடவர் தமது குற்றங்களை ஒப்புக்கொண்டார். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!