பதின்மவயதுப் பெண்ணைக் காயப்படுத்திய பெண்ணிடம் விசாரணை

பதின்மவயதுப் பெண்ணைக் காயப்படுத்திய பெண்ணிடம் விசாரணை

1 mins read
ce1d9cb7-0843-4cb0-b0d4-b86b6c8db44f
சனிக்கிழமை (ஜூலை 18) பிற்பகல் 3.25 மணியளவில் *ஸ்கேப் நிலையத்தில் உதவி கோரி அழைப்பு வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். காயமடைந்த அந்த பதின்மவயதுப் பெண், சுயநினைவோடு டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். - படம்: ரெடிட்

ஆர்ச்சர்ட் லிங்க் பகுதியில் உள்ள *ஸ்கேப் இளையர், வாழ்வியல் வளாகத்தில், 17 வயது இளம்பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 26 வயதுப் பெண் ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சனிக்கிழமை (ஜூலை 18) பிற்பகல் 3.25 மணியளவில் *ஸ்கேப் நிலையத்தில் உதவி கோரி அழைப்பு வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். காயமடைந்த அந்த பதின்மவயதுப் பெண், சுயநினைவோடு டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அன்றைய தினம் *ஸ்கேப் நிலையத்தில் நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின்போது மோதல் வெடித்ததாக ‘ரெடிட்’ சமூக ஊடகத்தில் தகவல்கள் வெளியாகின.

அங்குள்ள நிலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆம்புலன்சும் அனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்