சிங்கப்பூரில் 107 ஆண்டுகளுக்குப் பிறகு ‘லேஸ்’ வண்டு

சிங்கப்பூரில் 107 ஆண்டுகளுக்குப் பிறகு ‘லேஸ்’ வண்டு

1 mins read
1a99248a-2598-487d-96e2-c7c584e5c2d7
024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இயற்கை ஆர்வலர்கள் யப் யீ ஹியன் மற்றும் ரேன் ஓங் அந்த வண்டைப் பார்த்ததாகத் தெரிவித்தனர்.  - படம்: யப் யீ ஹியன்

சிங்கப்பூர் பூமலையில் கடைசியாக 1917ஆம் ஆண்டில் பார்க்கப்பட்ட “லேஸ்’ வண்டு, அண்மையில் மீண்டும் தோன்றியுள்ளது.

கிட்டத்தட்ட 107 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் பூமலையில் அடையாளம் காணப்பட்ட ‘லேஸ்’ வண்டு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இயற்கை ஆர்வலர்கள் யப் யீ ஹியன் மற்றும் ரேன் ஓங் அந்த வண்டைப் பார்த்ததாகத் தெரிவித்தனர்.

இதற்கு முன்னர் 1917ஆம் ஆண்டு சார்ல்ஸ் பேக்கர் என்னும் அமெரிக்கச் செடி ஆராய்ச்சியாளர் இந்த லேஸ் வண்டைப் பார்த்தார். அதன் பிறகு தற்போது அவை மீண்டும் கண்ணில் பட்டுள்ளது பிரமிப்பூட்டும் ஒன்று என்று திரு யாப் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்