பெட்ரோல் நிலையக் கடையில் 80 முறைக்குமேல் திருட்டு; ஆடவர்மீது வழக்கு

சிங்கப்பூரின் ‌ஷெல் பெட்ரோல் நிலையத்தில் உள்ள கடையில் 80க்கும் அதிகமான முறை திருடிய சந்தேகத்தின்பேரில் ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அல்பர்ட் பாங் என்னும் 51 வயது அந்த ஆடவர்  ஹாவ்லாக் ரோட்டில் உள்ள பெட்ரோல் நிலைய கடையில் செய்தித்தாள்கள், மிட்டாய்கள், பத்திரிகைகள் போன்றவற்றைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. 

ஆடவர்மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

தியோங் பாரு பகுதியில் செய்தித்தாள்கள், பொட்டலங்கள் காணாமல் போனதாக காவல்துறை அதிகாரிகளுக்கு பல புகார்கள் வந்தன.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சந்தேக நபர் பாங் கைது செய்யப்பட்டார்.

ஆடவரிடம் மார்ச் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழு ஆண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!