சிங்கப்பூர் வந்த விமானத்தில் பெண்ணை மானபங்கம் செய்ததாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர் வந்த விமானத்தில் பெண்ணை மானபங்கம் செய்ததாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த விமானத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் வழக்கு
fbe92bab-067c-42c4-8506-985370f3305a
சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்ததும் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜப்பானிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் பயணியை மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் ஆடவர்மீது வியாழக்கிழமை (ஏப்ரல் 30) குற்றம் சாட்டப்பட்டது.

ஏரியல் லுத்ஃபியான் முவரிஃபின் எனும் அந்த ஆடவர், ஏப்ரல் 15ஆம் தேதி ஜப்பானின் ஒக்கினாவா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஸ்கூட் விமானத்தில் அந்தக் குற்றச்செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்தோனீசியாவைச் சேர்ந்த அந்த 20 வயது ஆடவர், அப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது.

காவல்துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அந்தப் பெண் பயணி தமது இருக்கையிலிருந்து எழுந்து சென்று விமானச் சிப்பந்திகளின் உதவியை நாடினார். அவர்கள் பின்னர் விமானியிடம் இதுகுறித்துப் புகாரளித்தனர்.

விமானம் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கு மீண்டும் மே 15ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பெண்ணை மானபங்கம் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏரியலுக்கு மூன்று ஆண்டுகள் வரையிலான சிறை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றில் ஏதாவது இரண்டோ அல்லது மூன்றுமோ அபராதமாக விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்