துவாஸ் சோதனைச் சாவடி அருகே விபத்து; சுயநினைவிழந்த ஆடவர்

துவாஸ் நோக்கிச்செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் மோட்டார் சைக்கிளோட்டி விபத்துக்குள்ளானர்.

25 வயதான அந்த மோட்டார் சைக்கிளோட்டி சுயநினைவில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  

விபத்து குறித்து காலை 8 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து காரணமாக துவாஸ் சோதனைச் சாவடி நோக்கிச் செல்லும் 5 வழி சாலையில் மூன்று வழிகள் தற்காலிகமாக மூடப்பட்டதாக குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் காலை 8 மணிக்கு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டது. 

அவ்வழியாகப் பயணம் மேற்கொள்பவர்கள் பயண நேரத்தில் தாமதத்தை ஏதிர்பார்க்கலாம் என்று அது குறிப்பிட்டது.

போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஒன் மோட்டரிங் தளத்தில் காலை 8 மணி முதல் 10 மணி வரை  ஜோகூர் நோக்கிச் செல்லும் சோதனைச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் இருந்ததைக் காணமுடிந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!