தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆயர் ராஜா விரைவுச்சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

1 mins read
adcf3abf-ea26-4dcd-b96f-1b898554f0bd
சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளோட்டியின் மரணத்தைச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை உறுதி செய்தது. - படம்: ஷின்மின் வாசகர்

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் டிசம்பர் 28ஆம் தேதி காலையில் லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.

அதில் 58 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

கவனமின்றி வாகனமோட்டி, மரணம் விளைவித்தார் என்ற சந்தேகத்தின் பேரில், 46 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

டிசம்பர் 28ஆம் தேதி காலை 11.30 மணிக்கு விபத்து குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்