சாங்கி பொது மருத்துவமனையில், புதிய முறையைப் பயன்படுத்தி இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படலாம்.
அத்தகைய சிகிச்சைமுறையைப் பயன்படுத்துவதால், விரைவில் குணமடையலாம். அதோடு குறைவான வலியும் சிக்கல்களும் மட்டுமே ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
சாங்கி பொது மருத்துவமனையில் ‘ஏபிஎம்எஸ்’ அணுகுமுறை என்று அழைக்கப்படும் அந்தப் புதிய முறையின் முலம் அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டவர்கள், மருத்துவமனையில் சராசரியாக ஓரிரு நாள்கள் தங்கியிருந்தனர்.
சென்ற ஆண்டு ஜூலை மாதம் முதல், சாங்கி பொது மருத்துவமனையில் 30 நோயாளிகள் புதிய முறையின்வழி இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டுள்ளனர்.
சாங்கி பொது மருத்துவமனையில் இந்த முறையில் பயிற்சிபெற்ற முதல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மூ இங் ஹாவ்.
வழக்கமான முறையைக் காட்டிலும், புதிய முறை பல்வேறு நோயாளிகள், குறிப்பாக மூத்தோரிடையே மேற்கொள்ளப்படலாம் என்றும் நோயாளிகள் விரைவில் குணமடைந்து, அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை அடையலாம் என்றும் சாங்கி பொது மருத்துவமனையின் எலும்பியல் துறையில் பணிபுரியும் அவர் கூறினார்.