டிசம்பர் வரை மெர்லயன் சிலையைச் சீர்செய்யும் பணி

வரும் திங்கட்கிழமை முதல் டிசம்பர் 31ஆம் தேதிவரை மெர்லயன் பூங்காவில் இருக்கும் மெர்லயன் சிலையைப் புகைப்படம் எடுக்க முடியாது.

பழுதுபார்ப்புப் பணிகளுக்காக அது மூடப்பட்டிருக்கும் என்பதே அதற்குக் காரணம்.

“இந்தக் காலகட்டத்தில் பழுதுபார்ப்புப் பணிகளாலும் தடுப்புவேலிகளாலும் அசௌகரியம் ஏற்படலாம் என்பதால் பொதுமக்களின் புரிதலை நாடுகிறோம்,” என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் கூறியது.

மெர்லயன் சிலை அண்மையில் ஜூலை 27 முதல் ஜூலை 28 வரை பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்படிருந்தது.

உள்ளூர் சிற்பி லிம் நாங் செங் 1972ஆம் ஆண்டில் செதுக்கிய அந்த தேசியச் சின்னம், சென்ற ஆண்டு செப்டம்பரில் அதன் 50ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது.

சில மாதங்களாக நீடிக்கவிருக்கும் பழுதுபார்ப்புப் பணிகளின்போது, அதற்கு அருகில் உள்ள ‘குட்டி மெர்லயன்’ என்று பொதுவாக அழைக்கப்படும் சிறிய சிலையைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!