ஒடிசா ரயில் விபத்து; பிரதமர் லீ ஆழ்ந்த அனுதாபம்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இந்தியப் பிரதமர் நநேரந்திர மோடிக்கு  ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

அது குறித்த தகவல்களை வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கும் திரு மோடிக்கும் சிங்கப்பூர் சார்பாகத் தமது இரங்கலை பிரதமர் லீ தெரிவித்தார்.  

மும்பையில் இருக்கும் சிங்கப்பூர்த் தூதரகம் உள்ளூர் அதிகாரிகளோடு தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சு கூறியது. 

இதுவரை சிங்கப்பூரர்கள் யாரும் அந்த விபத்தில் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் ஏதும் இல்லை.

ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ( ஜுன் 2) இரவு இரண்டு பயணிகள் ரயில்கள் பெரும் விபத்தில் சிக்கிக்கொண்டன. அதில் 288 பேர் மாண்டனர், கிட்டத்தட்ட 700 பயணிகள் காயமடைந்தனர். 56 பேருக்கு கடுமையாக காயங்கள் ஏற்பட்டுள்ளன.  

ஒடிசா ரயில் விபத்து குறித்து பிரெஞ்‌சு அதிபர் மக்ரோன், கனடியப் பிரதமர் ஜஸ்டின் டூருடோ, அமெரிக்க அதிபர் பைடன் உட்பட பல உலகத் தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!