நாணய ஆணைய தலைமைப் பொறுப்பில் மேனன் தொடர்வார்

சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநரான திரு ரவி மேனன், அந்தப் பொறுப்பில் மேலும் இரண்டு ஆண்டு களுக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.  

திரு மேனனுக்கு இந்த ஆண்டு வயது 59 ஆகிறது. அவர் அந்தப் பொறுப்பில் 2011ஆம் ஆண்டு முதல்  இருந்து வருகிறார். 

அவரின் தற்போதைய பதவிக்காலம் இந்த  மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அத்துடன் அவர் ஆணையத்தில் இருந்து விலகிவிடுவார் என்று ஊகச் செய்திகள் தெரிவித்தன. 

ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் ஆக அதிக காலம் இருந்து வரும் திரு மேனன், பொதுச் சேவையில் இருந்து ஓய்வுபெறும் வரை அல்லது 2025ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரை அந்தப் பொறுப்பில் மீண்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்று ஆணையம் தனது அறிக்கையில் நேற்று தெரிவித்தது. 

திரு மேனன் ஆணையத்தின் நிர்வாகச் சபை உறுப்பினராக ஜூன் 1ஆம் தேதி முதல் 2025 மே 31ஆம் தேதி வரை மீண்டும் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிக்கை தெரிவித்தது.

தலைமைச் சட்ட அதிகாரி லூசியன் வோங், ‘நெட்லிங்க் என்பிஎன் மேனேஜ்மெண்ட்’ நிறுவனத்தின் தலைவரான சாலி மா இருவரும் ஆணையத்தின் நிர்வாகச் சபை உறுப்பினராக 2026 மே 31ஆம் தேதி வரை மூன்றாண்டு காலத்திற்கு மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் அறிக்கை தெரிவித்தது.

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!