தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்னிலக்க நாணயச் சேவை; வளர்ச்சிப் பாதையில் ‘டிரிப்பிள்-ஏ’ நிறுவனம்

1 mins read
0e5ca03e-8342-40d3-923b-48ee8c9dc5ad
அமெர்க்காவைச் சேர்ந்த ‘பேபால்’ உலக அளவில் பிரபலமான பண பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனமாகும். - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் ‘டிரிப்பிள்-ஏ’ மின்னிலக்க நாணயப் பரிவர்த்தனை நிறுவனம் தற்போது ‘பேபால்’ நிறுவனத்தின் மின்னிலக்க நாணயத்தை அதன் கட்டமைப்பில் சேர்த்துள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளில் ‘டிரிப்பிள்-ஏ’வின் சேவை விரிவாக்கம் காணும்.

இது குறித்த அறிவிப்பை ‘டிரிப்பிள்-ஏ’ மே 28ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டது.

‘பேபால்’இன் ‘பேபால் யுஎஸ்டி’ நாணயத்திற்கான சேவைகள் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டுக்குள் தங்களது கட்டமைப்பில் இந்த சேவைகளை இரு மடங்காக உயர்ந்த திட்டமிட்டுள்ளதாகவும் ‘டிரிப்பிள்-ஏ’ கூறியது.

‘பேபால் யுஎஸ்டி’ நிலையான மின்னிலக்க நாணயம் ஆகும். அது அமெரிக்க டாலர், யூரோ உள்ளிட்ட நாணயங்களுக்கு நிகரான அன்றைய மதிப்பை கொண்டிருக்கும்.

அமெர்க்காவைச் சேர்ந்த ‘பேபால்’ உலக அளவில் பிரபலமான பண பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனமாகும்.

குறிப்புச் சொற்கள்