சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் ‘டிரிப்பிள்-ஏ’ மின்னிலக்க நாணயப் பரிவர்த்தனை நிறுவனம் தற்போது ‘பேபால்’ நிறுவனத்தின் மின்னிலக்க நாணயத்தை அதன் கட்டமைப்பில் சேர்த்துள்ளது.
இவ்வாறு செய்வதன் மூலம் அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளில் ‘டிரிப்பிள்-ஏ’வின் சேவை விரிவாக்கம் காணும்.
இது குறித்த அறிவிப்பை ‘டிரிப்பிள்-ஏ’ மே 28ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டது.
‘பேபால்’இன் ‘பேபால் யுஎஸ்டி’ நாணயத்திற்கான சேவைகள் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டுக்குள் தங்களது கட்டமைப்பில் இந்த சேவைகளை இரு மடங்காக உயர்ந்த திட்டமிட்டுள்ளதாகவும் ‘டிரிப்பிள்-ஏ’ கூறியது.
‘பேபால் யுஎஸ்டி’ நிலையான மின்னிலக்க நாணயம் ஆகும். அது அமெரிக்க டாலர், யூரோ உள்ளிட்ட நாணயங்களுக்கு நிகரான அன்றைய மதிப்பை கொண்டிருக்கும்.
அமெர்க்காவைச் சேர்ந்த ‘பேபால்’ உலக அளவில் பிரபலமான பண பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனமாகும்.