மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகச் சந்தேகம்; சிங்கப்பூருக்கு தங்கம் வென்ற வீரர் மீது வழக்கு

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூருக்கு சுவர் பந்தில் தங்கம் வென்ற விவ்யன் ரமனன் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டிய சந்தேகத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

கவனம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதற்காகவும் விவியன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

37 வயது விவியன் மூன்று முறை சிங்கப்பூருக்கு தங்கம் வென்றவர்.

2022ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி காலை 10 மணிவாக்கில் செம்பவாங் ஹில்ஸ் டிரைவ்வில் விவியன் காரை ஓட்டத் தடுமாறியதாகவும் அதனால் விபத்து ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது அவரின் ரத்த பரிசோதனையில் 100 மில்லிலிட்டர் ரத்தத்தில் 82 மில்லிகிராம் மதுபானம் இருந்தது. 

100 மில்லிலிட்டர் ரத்தத்தில் 80 மில்லிகிராமுக்கு மேல் மதுபானம் இருக்கக்கூடாது. 

வழக்கு விசாரணை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுபவர்களுக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம் மற்றும் ஓர் ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

மீண்டும் அதே குற்றத்தை செய்தால் 20,000 வெள்ளி வரையிலான அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!