உயர் கடலலையால் புலாவ் உபின், ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் வெள்ள பாதிப்பு

பருவகால உயர் கடலலைகளால் புலாவ் உபினில் உள்ள தாழ்வான நிலப்பகுதிகள் சில, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவும் ஜனவரி 13ஆம் தேதியன்று பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடல் அலை வழக்கத்துக்கு மாறாக 3.3 மீட்டர் வரை உயர்ந்ததை அடுத்து தென்கடலோரப் பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் கணுக்கால் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது.

தேசிய பூங்காக் கழகம் தீவின் வடிகால் அமைப்பை மேம்படுத்தியதன் வழி கடந்த ஈராண்டாக வெள்ளப் பாதிப்பு குறைந்துள்ளதாக புலாவ் உபின் தீவில் கடை வைத்திருப்போரில் சிலர் கூறுகின்றனர்.

பருவகால கடல் அலைகள் ஜனவரியிலும் பிப்ரவரியிலும் வெள்ளம் ஏற்படக் காரணமாக இருந்துவருகின்றன. அத்துடன் கனமழையும் சேர்ந்துகொள்ளும்போது கடல் நீர் தீவை ஊடுருவித் தாழ்வான பகுதிகளை மூழ்கடிப்பதுண்டு.

இதுவரை ஆக உயரமான கடல் அலை 3.9 மீட்டர் வரை இருந்ததாகவும் இது 1974ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிலுள்ள கால்வாய்களிலும் நீர் நிரம்பி வழிந்ததை ஜனவரி 12ஆம் தேதி காலைவேளையில் காண முடிந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!