மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிற்கான பாராட்டு நிகழ்ச்சி ஜனவரி 11ல் நடைபெறும்

1 mins read
6047766b-2225-44bf-8a3f-6bd331160d4b
மூத்த அமைச்சர் லீ சியன் லூங். - படம்: பெரித்தா ஹரியான்

முன்னாள் பிரதமரும் மூத்த அமைச்சருமான லீ சியன் லூங்கிற்காக இந்தியச் சமூகம் ஏற்பாடு செய்துள்ள பாராட்டு விருந்து நிகழ்ச்சி 2025 ஜனவரி 11ஆம் தேதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மரினா பே சேண்ட்ஸ் விடுதியின் ‘தி சேண்ட்ஸ் கிராண்ட் பால்ரூம்’ வளாகத்தில் அந்த இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெறும் என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டிற்குத் திரு லீ ஆற்றிய பெரும்பங்களிப்பிற்காக அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட அந்நிகழ்ச்சி, அக்டோபர் 10ஆம் தேதி வியாழக்கிழமை இரவு இடம்பெறுவதாக இருந்தது.

திரு லீயின் சகோதரி டாக்டர் லீ வெய் லிங் அக்டோபர் 9ஆம் தேதி காலமானதையடுத்து, அவ்விருந்து நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்