தோ பாயோ பகுதியில் உள்ள கோப்பிக் கடையில் தீ

தோ பாயோவின் 260 கிம் கியட் அவென்யூவில் உள்ள கோப்பிக் கடை ஒன்றில் வெள்ளிக்கிழமை இரவு தீச்சம்பவம் ஏற்பட்டது.

சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை. தீச்சம்பவம் ஏற்படும் போது அந்தக் கடையில் யாரும் இல்லை. 

கோப்பிக் கடைக்கு எதிரே இருந்த கடையில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். 

தீச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு இரவு 11:15 மணிக்குத் தகவல் வந்ததாக அதிகாரிகள் கூறினர். 

அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது மூடப்பட்டிருந்த கடையில் தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

புகையால் மூடப்பட்டிருந்த கடைக்குள் சென்ற பீ‌‌‌ஷான் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 

கோப்பிக் கடைக்குள் இருந்த சில உணவு நிலையங்களின் பொருள்கள் தீயில் சேதமடைந்தன. 

தீ எதனால் ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!