அபுதாபியிலும் துபாயிலும் உள்ள சிங்கப்பூரர்கள் ஓமானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

அபுதாபியிலும் துபாயிலும் உள்ள சிங்கப்பூரர்கள் ஓமானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

1 mins read
2b01e166-062b-478b-aa67-d329471f1323
அபுதாபியிலும் துபாயிலும் உள்ள சிங்கப்பூரர்கள் இரண்டு குழுக்களாக ஓமானின் மஸ்கட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். - படம்: ஃபேஸ்புக்/அபுதாபியிலுள்ள சிங்கப்பூர்த் தூதரகம்

அபுதாபியில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகமும் துபாயில் உள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதரகமும் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) காலையில் அபுதாபியிலும் துபாயிலும் உள்ள சிங்கப்பூரர்களை இரண்டு குழுக்களாக ஓமானின் மஸ்கட்டுக்கு அனுப்பியுள்ளன.

அவர்கள் சனிக்கிழமை (மார்ச் 7) மஸ்கட்டிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் செல்வார்கள். பயணத்தின் முதற்கட்டமாக, சிங்கப்பூர்த் தூதரக, துணைத் தூதரக அதிகாரிகள் அவர்களுடன் பேருந்தில் செல்வார்கள்.

மஸ்கட்டில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகமும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் நெருக்கடிநிலைச் சமாளிப்புக் குழுவும் ஓமானில் அவர்களுக்கு ஆதரவு வழங்கும்.

புறப்படுவதற்கு முன்னர், சிங்கப்பூரர்களிடம் தூதர் கமல் ஆர் வாஸ்வானியும் துணைத் தூதர் ரஸிஃப் அல்ஜுனிட்டும் பேசினார்கள். விமானச் சேவைகள் ரத்தானதால், பலருக்குச் சவால்மிகுந்த வாரமாக அமைந்தது.

இப்போது அவர்கள் வீடு திரும்ப முடியும் என்பதால் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் பயணிகளுக்கு அது பாதுகாப்பான, சுமுகமான பயணமாக அமையவேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும் அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்