செங்காங் கொண்டோமினியத்தில் பெண் கொலை; ஆடவர் கைது

செங்காங்கில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் (கொண்டோமினியம்) உள்ள வீடு ஒன்றில் 43 வயது பெண் கொல்லப்பட்ட சந்தேகத்தின் பேரில் 48 வயது ஆடவர் இன்று (ஜனவரி 3) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது நீதிமன்றத்தில் நாளை குற்றஞ்சாட்டப்படும்.

எண் 125 காம்பஸ்வேல் போவில் இருக்கும் எஸ்பரினா ரெசிடன்சஸ் எனும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் நிகழ்ந்த இயற்கைக்கு மாறானதாக வகைப்படுத்தப்பட்ட இந்த மரணம் பற்றி இன்று பிற்பகல் 12.07 மணியளவில் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.

இறந்துபோன பெண்ணும் கைது செய்யப்பட்ட ஆடவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று போலிசார் தெரிவித்தனர்.

அசைவின்றி கிடந்த அந்தப் பெண், இறந்து போனதை துணை மருத்துவ அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உறுதிசெய்தனர்.

கொலை என்று வகைப்படுத்தப்பட்ட இந்தச் சம்பவம் குறித்து போலிசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!