கன்கார்டு தொடக்கப்பள்ளியில் தீ; 1,400 பேர் வெளியேற்றம்

சுவா சூ காங்கில் உள்ள கன்கார்டு தொடக்கப்பள்ளியில் இன்று (ஜனவரி 29) காலை தீ மூண்டதையடுத்து சுமார் 1,400 பேர் வகுப்பறைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

காலை 10.30 மணியளவில் இந்தச் சம்பவத்தின் தொடர்பில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

விளையாட்டுப் பொருள்கள் சேகரித்து வைக்கப்படும் அறையில் மூண்ட தீயை தண்ணீரைப் பீய்ச்சியடித்து அதிகாரிகள் அணைத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் பள்ளிக்கு வரும் முன்பாகவே, பள்ளி அதிகாரிகள் 1,400 பேரை பாதுகாப்பாக மீட்டனர். சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

தீப்பற்றியதற்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.

#கன்கார்டுதொடக்கப்பள்ளிதீ #தமிழ்முரசு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!