சிங்கப்பூரில் 81 பேருக்கு கொரோனா தொற்று; தேவாலயத்தின் தொடர்பில் மட்டும் 21 பேர்

சிங்கப்பூரில் மேலும் நால்வருக்கு கொரோனா கிருமி தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்த்து மொத்தம் 81 பேர் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்று (பிப்ரவரி 18) தெரிவித்தது.

தற்போது உறுதி செய்யப்பட்ட நான்கு சம்பவங்களும் முந்தைய சம்பவங்களுடன் தொடர்புடையவை.

நால்வரில் மூன்று பேர் ஆகப்பெரிய அளவில் கிருமி பரவிய ‘கிரேஸ் அசெம்ப்ளி ஆஃப் காட்’ தேவாலயத்துடன் தொடர்புடையவர்கள். இந்த மூன்று சம்பவங்களால் தேவாலயத்தின் தொடர்பில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21க்கு அதிகரித்துள்ளது.

நான்காவது நபர், இதற்கு முந்தைய இரண்டு கிருமித்தொற்றுச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர். ஒருவர், மயக்க மருந்து மருத்துவர், மற்றொருவர் சீன நாட்டவர்.

தேவாலய சம்பவத்துடன் தொடர்புடைய மூவரில் ஒருவர் 57 வயது சிங்கப்பூர் குடிமகள். கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 78வது நபர் இவர். இம்மாதம் 9ஆம் தேதி இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பிப்ரவரி 10, 17 தேதிகளில் இரண்டு மருத்துவர்களிடம் அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார். பின்னர் பிப்ரவரி 17ஆம் தேதி தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்துக்கு அவர் அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா கிருமி தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு தொண்டூழிய நிறுவனம் நடத்தும் சமூக மருத்துவமனையில் அவர் பணியாற்றினார். அங்கு நிர்வாகப் பணியில் ஈடுபட்டதால் நோயாளிகளுடன் அவருக்குத் தொடர்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 80வது நபர் 38 வயது சிங்கப்பூர் குடிமகள். தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் இவர் நிர்வாகப் பணி செய்து வருகிறார். கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 66வது நபரான, ‘கிரேஸ் அசெம்ப்ளி ஆஃப் காட்’ தேவாவலயத்தில் பணியாற்றும் நபர் மூலம் இவருக்கு கிருமித் தொற்றியுள்ளது. தற்போது தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் இவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். காட்ஸ் கிங்டம் பிரட் ஆஃப் லைஃப் சர்ச் தேவாலயத்துக்கு அவர் சென்றிருந்ததாகக் கூறப்பட்டது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 81வது நபர், 50 வயது சிங்கப்பூரர் ஆவார். ‘கிரேஸ் அசெம்ப்ளி ஆஃப் காட்’ தேவாவலயத்துடன் தொடர்புடைய கிருமித்தொற்று சம்பவம் இது. பிப்ரவரி 18ஆம் தேதி (இன்று) இவருக்கு கிருமி தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது.

கிருமித்தொற்று கண்ட 79வது நபர், 35 வயது மலேசிய மாது. வேலை அனுமதிச் சீட்டு பெற்று சிங்கப்பூரில் இவர் பணியாற்றி வருகிறார். மயக்க மருந்து மருத்துவரால் கிருமித் தொற்றிய சீன நாட்டவரின் குடும்ப உறுப்பினர் இவர் என கூறப்பட்டது. பிப்ரவரி 12 ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதால் வீட்டில் இவர் தனிமைப்படுத்தப்பட்டார். பிப்ரவரி 17ஆம் தேதி தேசிய தொற்று நோய் தடுப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு அங்கு அவருக்கு கிருமித் தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பு அவர் அட்மிரல்டியில் இருக்கும் 'ஃபுட்எக்ஸ்சேஞ்ச்'சில் பணிபுரிந்தார்.

தற்போது சிகிச்சை பெற்று வரும் 52 நோயாளிகளில் பெரும்பாலானோரின் உடல்நிலை சீராக இருக்கிறது என்று அமைச்சு குறிப்பிட்டது.

ஆனால் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நால்வரின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் அது கூறியது.

அதே சமயத்தில் கிருமி பாதிப்பிலிருந்து குணமடைந்த ஐவர் வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் வூஹானிலிருந்து திரும்பிய ஒரு வயது சிறுவனும் ஒருவன். இது வரை மொத்தம் 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#தமிழ்முரசு #கொரோனா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!