4D, டோட்டோ தற்காலிக நிறுத்தம்

உள்ளூரில் கிருமிப் பரவலைத் தடுக்கும் நோக்கில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்ததைத் தொடர்ந்து சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனமும் தனது சேவைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது.

லாட்டரி குலுக்கு, நான்கு இலக்கம் மற்றும் டோட்டோ ஆகிய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.

4டி எனப்படும் நான்கிலக்கக் குலுக்கல் இந்த வார இறுதியோடு நிறுத்தப்படும்.

மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிக நிறுத்தம் தொடரும்.

அதேபோல, டோட்டோ லாட்டரி குலுக்கல் நாளை திங்கட்கிழமை திட்டமிட்டபடி நடக்கும்.

அதன் பின்னர் நடைபெற வேண்டிய குலுக்கல் அத்தனையும் ரத்து செய்யப்படும்.

இதுபோன்ற பந்தயங்களுக்கு சீட்டு வாங்கியவர்கள் அதனை வைத்திருக்குமாறும் பணம் திரும்பப்பெறுவதற்கான நடைமுறை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சிங்கப்பூர் பூல்ஸ் தெரிவித்துள்ளது.

விளையாட்டு தொடர்பான பந்தயப் பிடிப்புகளும் மறு அறிவிப்பு வரும் வரை தள்ளி வைக்கப்படுவதாக சிங்கப்பூர் பந்தயப் பிடிப்புக் கழகம் கூறியுள்ளது.

#சிங்கப்பூர் #4D #Toto

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!