கொவிட்-19 தொடர்பில் சட்டவிரோத இணைய சூதாட்டத் தளங்கள்

கொவிட்-19 கொள்ளைநோய் உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை நாள்தோறும் குடித்துக்கொண்டிருக்கும் வேளையில், சிலர் இந்த நெருக்கடியை தங்களுக்குச் சாதகமான சூதாட்டத்துக்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

சட்டவிரோத சூதாட்ட இணையத் தளங்கள் சிங்கப்பூர் உட்பட மற்ற நாடுகளின் சூதாட்ட ஆர்வலர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

அவை நாள் தோறும் ஒவ்வொரு நாட்டிலும் நிகழும் கிருமித்தொற்று சம்பவங்களை மையமாக வைத்து சூதாட்ட ஆர்வலர்களைப் பந்தயம் கட்ட அழைக்கின்றன.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஒவ்வொரு நாளும் பதிவாகவுள்ள கிருமித்தொற்று சம்பவங்களின் கடைசி எண்ணை வைத்து பந்தயம் கட்டப்படுகிறது.

அத்துடன் அந்தக் கடைசி எண் ஒற்றை எண்ணா, இரட்டை எண்ணா என்றும் முந்தைய நாளின் எண்ணிக்கையைவிட அன்றைய நாளின் எண்ணிக்கை ஏற்றமா, இறக்கமா என்றும் பல்வேறு வகைகளில் பந்தயம் கட்டப்படுகிறது என்று ‘த நியூ பேப்பர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரிலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ இயக்கப்படும் சட்டவிரோத சூதாட்டத்தளச் சேவைகளை வழங்குவோருக்கு எதிராக $200,000 வரை அபராதம், ஐந்தாண்டு சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பதை போலிஸ் நினைவூட்டியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!