சவூதி அரேபியாவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் 85 பேர் சிங்கப்பூருக்குத் திரும்பினர்

சவூதி அரேபியாவில் அனைத்து வர்த்தக விமானச் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கிருந்து 85 சிங்கப்பூரர்கள் மற்றும் சிங்கப்பூர்வாசிகள் சிங்கப்பூருக்கு சிறப்பு விமானம் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவர்கள் தாயகத்துக்குத் திரும்புவதற்காக மீட்பு விமானம் ஒன்றை ஏற்பாடு செய்ததாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இன்று (ஏப்ரல் 24) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

ரியாத்திலுள்ள சிங்கப்பூர் தூதரக அதிகாரிகளும் ஜெத்தாவில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரும் இந்த மீட்பு நடவடிக்கைகளை அங்கிருந்து ஒருங்கிணைத்தனர்.

இன்று காலை அவர்கள் 85 பேரும் சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சவூதி அரேபியாவில் பயிலும் 40 மாணவர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் இந்தக் குழுவில் அடங்குவர்.

அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படும் வளாகங்களில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என்றது அமைச்சு.

சிங்கப்பூர்வாசிகள் பாதுகாப்பாக திரும்பி வர உதவிய சவூதி அரசாங்கத்துக்கு சிங்கப்பூர் அரசாங்கம் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!