தற்போதைய கொவிட்-19 நெருக்கடி காலத்தில், சிங்கப்பூர்வாழ் வெளிநாட்டு ஊழியர்களுக்காக நடிகர் கமல்ஹாசன் செய்தி ஒன்றை காணொளி வடிவில் அனுப்பியுள்ளார்.
அந்தக் காணொளியைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன், தமது வேண்டுகோளுக்கிணங்கி, தமிழகத்திலிருந்து வந்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக காணொளி பதிவு செய்து அனுப்பிய நடிகர் கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
(காணொளியை முழுமையாகக் காண முழுத்திரையில் பார்க்கும் வசதியைத் தெரிவுசெய்யவும்).
இந்தக் காணொளி திரு கமலின் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கும் என நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பின்புலம், நாடு என்ற வேறுபாடின்றி கொவிட்-19 அனைவரையும் பாதித்துள்ளது. சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், வெளிநாட்டு ஊழியர்கள் என நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தச் சூழலைக் கடப்போம் என்று குறிப்பிட்டுள்ளார் திரு ஈஸ்வரன்.