குழந்தைப் பராமரிப்பு நிலையத்தின் ஊழியர் ஒருவர் உட்பட 3 சிங்கப்பூரர்களுக்கு நேற்று (மே 24) கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
தெம்பனிசில் இருக்கும் இமான் குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் பணிக்குச் சென்ற அந்த 33 வயது பெண், நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 548 பேரில் ஒருவர் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
அவருக்கு நேற்று முன்தினம் கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அதே நாளில் கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது.
மற்றொரு சிங்கப்பூரரான, SSKBJV ஊழியர் விடுதியில் பணியாற்றிய 55 வயது ஆடவருக்கு இம்மாதம் 17ஆம் தேதி அறிகுறிகள் தென்பட்டன. நேற்று முன்தினம் அவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மூன்றாவது சிங்கப்பூரர் 35 வயதான பெண்பணி. CDPL துவாஸ் ஊழியர் தங்கும் விடுதியில் பணியாற்றி, பின் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 37 வயது ஆடவரின் குடும்ப உறுப்பினர் இவர்.
எஞ்சிய 544 பேர் விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள்.
நேற்று உறுதி செய்யப்பட்ட சம்பவங்களில் 99 விழுக்காட்டினர் ஏற்கெனவே கண்டறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்புடையவர்கள்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online